கோவையில் பொங்கல் விற்பனைக்கு வைத்திருந்த வேதிபொருள் கலப்படம் செய்யப்பட்ட வெல்லத்தை உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து சீல் வைத்தனர், மேலும் தாமஸ்வீதி, ரங்கே கவுண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு கரும்பு, வெல்லம், உள்ளிட்ட பொருட்களின் விற்பனை தற்போது சூடு பிடிக்க தொடங்கி உள்ளது, இந்நிலையில் கோவை தாமஸ்வீதியில் உள்ள ஒரு சில வெல்ல மண்டிகளில் பொதுமக்களை கவர்வதற்காக வெல்லத்தின் வண்ணத்தை அதிகரிக்க சோடியம் ஹட்ரோ சல்பைடு பயன்படுத்துவதாக உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று கோவை டவுன்ஹால் தாமஸ் வீதி, ரங்கே கவுண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெல்ல மண்டிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், அதில் தாமஸ் வீதி பகுதியில் உள்ள ஒரு வெல்ல குடோனில் 750 கிலோ சோடியம் ஹட்ரோ சல்பைடு வேதி பொருள் கலந்த கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்து, சீல் வைத்தனர், மேலும் அதன் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர், ஆய்வு முடிவில் உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், கலப்பட வெல்லம் பிடிப்பட்டதை அடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள வெல்ல குடோன்களில் சோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாதிரியான வேதி பொருட்கள் கலந்த உணவை உட்கொண்டால் நுரையீரம் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் வண்ணங்களை பார்த்து இந்த மாதிரியான கலப்பட உணவு பொருட்களை வாங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.