கோவையில் பொங்கல் விற்பனைக்கு வைத்திருந்த வேதிபொருள் கலப்படம் செய்யப்பட்ட வெல்லத்தை உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் பறிமுதல்! !


கோவையில் பொங்கல் விற்பனைக்கு வைத்திருந்த வேதிபொருள் கலப்படம் செய்யப்பட்ட  வெல்லத்தை உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் பறிமுதல்  செய்து சீல் வைத்தனர், மேலும் தாமஸ்வீதி, ரங்கே கவுண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு கரும்பு, வெல்லம், உள்ளிட்ட பொருட்களின் விற்பனை தற்போது சூடு பிடிக்க தொடங்கி உள்ளது, இந்நிலையில் கோவை தாமஸ்வீதியில் உள்ள ஒரு சில வெல்ல மண்டிகளில் பொதுமக்களை கவர்வதற்காக வெல்லத்தின் வண்ணத்தை அதிகரிக்க சோடியம் ஹட்ரோ சல்பைடு பயன்படுத்துவதாக உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று கோவை டவுன்ஹால் தாமஸ் வீதி, ரங்கே கவுண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெல்ல மண்டிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், அதில் தாமஸ் வீதி பகுதியில் உள்ள ஒரு வெல்ல குடோனில் 750 கிலோ சோடியம்  ஹட்ரோ சல்பைடு வேதி பொருள் கலந்த கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்து, சீல் வைத்தனர், மேலும் அதன் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர், ஆய்வு முடிவில் உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், கலப்பட வெல்லம் பிடிப்பட்டதை அடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள வெல்ல குடோன்களில் சோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாதிரியான வேதி பொருட்கள் கலந்த உணவை உட்கொண்டால் நுரையீரம் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் வண்ணங்களை பார்த்து இந்த மாதிரியான கலப்பட உணவு பொருட்களை வாங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...