கோவை பீளமேடு அருகே உள்ள ஹிந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் இன்று பொங்கள் விழா கொண்டாடினர்.


இவ்விழாவில் தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற நடன நிகழ்ச்சிகளும், நாட்டுப்புற பாடல்களும் இசைக்கப்பட்டன. பாரம்பரிய ஆடைகளான வேட்டி கட்டி குழந்தைகள் பள்ளிக்கு வந்தனர். முன்னதாக, பாத்திகட்டி பொங்கல் வைக்கப்பட்டது.
இவ்விழாவை ஹிந்துஸ்தான் பள்ளியின் தாளாளர் சரஸ்வதி கண்ணயன் தொடங்கி வைத்தார்.


தொடர்ந்து, மாணவர்கள் 'டம்மி' ஜல்லிக்கட்டு நடத்தினர். காளை போன்று வேடமணிந்த மாணவரை சக மாணவர்கள் துரத்தி அசல் ஜல்லிக்கட்டு போலவே விளையாடிக்காட்டினர். இந்த காட்சி காண்போரை கவர்ந்தது. மேலும், ஜல்லிக்கட்டு குறித்து குழந்தைகள் அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக இந்நிகழ்வு அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.