வால்பாறையில் சின்கோனா பகுதியில் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் சமீப காலமாக அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளையும், ரேஷன் கடைகளை உடைத்தும் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.

இதேபோல் இன்று அதிகாலையில் சின்கோனா பாரதியார் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் வகுப்பறைகளின் கதவு, ஜன்னல்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியது. யானைகளின் இந்த செயலால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வரும் காலங்களில் இதே போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு அப்பகுதியைச் சுற்றி மின்வேலிகள் அமைத்து வனவிலங்குகள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் இன்று அதிகாலையில் சின்கோனா பாரதியார் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் வகுப்பறைகளின் கதவு, ஜன்னல்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியது. யானைகளின் இந்த செயலால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வரும் காலங்களில் இதே போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு அப்பகுதியைச் சுற்றி மின்வேலிகள் அமைத்து வனவிலங்குகள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.