கோவை மாவட்டம், நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்என்ஆர் கல்வி நிறுவனம் சார்பில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வின் போது, மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் கோவை மாவட்ட காவல் துறையினர் ஆகியோர் இணைந்து கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் வசித்து வரும் பகுதிக்குச் சென்று பழங்குடியின மக்களுடன் இணைந்து "காட்டுப் பொங்கல்" வைத்து கொண்டாடினர்.