கோவையில் செயல்பட்டு வரும் எஸ்என்எஸ் கல்வி நிறுவனத்தின் சார்பில் இன்று பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.

அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தின் போது மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் இணைந்து பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிகழ்வின் போது எஸ்என்எஸ் கல்வி நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.என்.சுப்பிரமணி, தாளாளர் எஸ்.ராஜலட்சுமி, செயலாளர் வி.எஸ்.வேலுசுவாமி, கல்லூரி முதல்வர் எம்.டேனியல் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.