மத்திய அரசு அனுமதி தராவிட்டால் தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என ஒன்றிணைந்த கோவை வாழ் மக்கள்


தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி தென்தமிழகத்தின் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு எனப்படும் தமிழர்களின் வீரவிளையாட்டு நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் தொன்மையான விளையாட்டுகளில் ஒன்றாகும். மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. இதைக் காண வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்துக்கு வருகை தருவர்.



இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நல வாரியம் என்றழைக்கப்படும் பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.



இதைத்தொடர்ந்து, இந்த தடையை நீக்கிவிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கூறி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட லட்சக் கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த இரண்டு வருடமாக நடத்தமுடியாமல் உள்ள தமிழர்களின் ஜல்லிக்கட்டை இவ்வருடன் நடத்தியே ஆக வேண்டும் என பலரும் முயற்சித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, வரும் பொங்கல் தினங்களில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டம், அவினாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட கோவை மக்கள் இன்று ஒன்றிணைந்துள்ளனர்.



மத்திய அரசு ஜல்லிக்கட்டை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவோம், பீட்டாவும், மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கடைபிடித்து வரும் பிடிவாதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாரும், முழக்கங்களை எழுப்பியவாரும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...