திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகராட்சியாக கோவையை அறிவித்து கோவை மாநகராட்சி ஆணையருக்கு ஸ்வச் பாரத் மிஷன் ஓடிஎப் சான்றிதழ் வழங்கப்பட்டது

கோவை மாநகராட்சியை திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகரமாக தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியாவின் எஸ்வச் பாரத் மிஷன் திறந்த வெளி மலம் கழித்தல் திட்ட மேலாளர், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயனிடம்  சான்றிதழை வழங்கினார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், "கடந்த 2017 ஜனவரி மாதம் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கோவை மாநகரை திறந்தவெளி கழிப்பிடமில்லா மாநகராட்சியாக அறிவிக்க தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வின் போது கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள திறந்த வெளி மலம் கழிப்பிடம் இடத்தையும், பொது கழிப்பிடங்கள், சமுதாயக் கழிப்பிடங்கள், தனிநபர் கழிப்பிடங்கள் மற்றும் குடியிருப்புகள், குடிசை பகுதிகள், வர்த்தக இடங்கள், குளக்கரை ஒட்டிய பகுதிகள், வழிபாட்டுத் தளங்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் 2 நாட்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வறிக்கை புதுதில்லி  குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியாவின் அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியாவின் மேலாளர் புவனேஷ் ரவாத், கோவை மாநகரை திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகரமாக அறிவித்து அறிவிப்புச் சான்றிதழை இன்று (12.01.2017) மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரிடம் வழங்கினார்.

மேலும், கோவை மாநகரை திறந்தவெளி கழிப்பிடமில்லா நகரமாக அறிவிக்க காரணமாக இருந்து, ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பொதுமக்களுக்கும் மாநகராட்சி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வருங்காலங்களில் பொது மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். 

குறிப்பாக பொது மக்கள் வீட்டிலுள்ள தனிநபர் கழிப்பிடங்கள், பொது கழிப்பிடங்கள் மற்றும் சமுதாயக் கழிப்பிடங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், பொது மக்கள் தங்கள் பகுதிகளில் அல்லது அவர்களுடைய வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தால் சம்மந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகத்தை தொடர்பு கொண்டால், மாநகராட்சி மூலம் உடனடியாக கழிப்பிடங்கள் கட்ட ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும், பொது மக்கள் திறந்த வெளியில் மலம் கழித்தால் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். ஆகவே, பொது மக்கள் இனி வரும் காலங்களில் கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்தி, கோவை மாநகரை திறந்த வெளி கழிப்பிடமில்லா மாநகரமாகவும், தூய்மையான மாநகரமாகவும் திகழ பொது மக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...