தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழகத்துக்கு மூன்று தங்க பதக்கங்கள்


கோவையில் நடைபெற்றுவரும் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் மூன்று தங்க பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.



கோவை நேரு விளையாட்டு அரங்கில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான 77 வது தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அண்ணா பல்கலைகழகம் சார்பாக நடத்தப்படும் இப்போட்டிகளில், நாடு முழுவதும் உள்ள 189 பல்கலைகழகங்களை சேர்ந்த 2,605 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற 46 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் நாளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளுக்கான தேர்வு சுற்றுகள் நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்று மும்முறை தாண்டுதல், 100 மற்றும் 800 மீட்டர் ஓட்டபந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. 



இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தமிழக வீராங்கனைகள் 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் பாரதியார் பல்கலைகழகத்தை சேர்ந்த அன்பரசி என்னும் மாணவி மும்முறை தாண்டும் போட்டியில் தங்க பதக்கத்தையும், மெட்ராஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பிரியா என்னும் வீராங்கனை 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளார். தொடர்ந்து விளையாடிய மெட்ராஸ் பல்கலைக்கழகத்தை  சேர்ந்த அர்ச்சனா ஆகியோர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் சிறப்பாக விளையாடி  தங்க பதக்கத்தையும், அடுத்த இடத்தை பிடித்த மதுரை காமராஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த ரேவதி வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...