ஜல்லிக்கட்டு சம்மந்தமாக யாரேனும் கைது செய்யப்பட்டால் இலவசமாக வழக்கு நடத்திக் கொடுக்கப்படும்: சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் பேட்டி


தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றிணைந்து, ஒரே இடத்தில் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவையும், அதற்கு தடைகோரிய பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பையும் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி விருதுநகர் போன்ற இடங்களில் மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் போன்ற விளையாட்டுகள் நடைபெற்றது. மேலும், ஆண்டுதோறும் பொங்கல் விழாவின் போது நடக்கும் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு  தடையை மீறி நடக்கும் என்று சமூக வலைதளங்களில் பலர் பதிவு செய்துவருகின்றனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்தி, அது சம்மந்தமாக யாரேனும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு தமிழக வழக்கறிஞர்கள் பலர் இலவசமாக வழக்கு நடத்திக் கொடுக்க தயாராக  உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்  சொர்ணவேல் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழ் உணர்வுள்ள வழக்கறிஞர்களை திரட்டி வாட்ஸ் ஆப் குழு ஒன்று தொடங்கப்படுள்ளதாகவும், அதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக கைது செய்யப்படுபவர்களுக்கு இலவசமாக வழக்கு நடத்திக்கொடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் "சிம்ப்ளிசிட்டி"-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :-

நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 17 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். ஜல்லிக்கட்டு நடத்த தமிழக மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை உச்ச நீதி மன்றம் நிராகரித்துவருகிறது. இந்த நிலையில் தமிழக மாணவர்கள் பல்வேறுகட்ட போரட்டங்ககளை நடத்தி வருகின்றனர். தடையை மீறி இந்த ஆண்டு தமிழகத்தில் தடைமீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று பல்வேறு அமைப்பினர் தெரிவித்துவருகின்றனர்.

அவ்வாறு ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தில், அந்தந்த கிராமத்தில் இருக்கும் போலீசார் தான் ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். தமிழ் உணர்வோடு இருக்கும் ஒவ்வொரு போலீசாரும் அவர்களை கடுமையான தண்டனை சட்ட பிரிவில் கைது செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம்.



இந்திய தண்டனை சட்டம் பிரிவு 141-ன் படி (பொது இடத்தில் அனுமதியின்றி கூடுதல்) ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு  சுலபமாக ஜாமீன் பெற்றுத்தர முடியும். இந்த பிரிவுக்கு அந்தந்த மாவட்ட  மாஜிஸ்திரேட்டுகள் தான் தீர்ப்பு வழங்குவர். அவர்களிடம் ஜாமீன்-க்கு விண்ணப்பித்து விட முடியும். இந்த பணியை அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் குறிப்பிட்ட வழக்கறிஞர்கள் சிலர் இலவசமாக நடத்திக்கொடுக்க  முன்வந்துள்ளனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் வழக்கறிஞர்கள் ஒன்று திரட்டப்பட்டு வருகின்றனர்.

மேலும், இதற்கென பிரத்யேகமாக 'வாட்சப் குழு' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை கரூர் மாவட்டத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தொடங்கியுள்ளார். இக்குழுவில் கிடைக்கும் தகவல்களை தொடந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள் செயல்பட உள்ளனர்.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யப்படலாம்  என்று பலர் கருத்து கூறிவருகின்றார். அப்படி பார்க்கும்போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி கர்நாடக அரசு காவிரியில் இருந்து  தமிழகத்திற்கு தண்ணீர தர மறுத்தது. இதனால் விவசாயம் செய்ய வழியின்றி பல  விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. மனிதர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படுவதற்கு மவுனமாய் இருக்கும் உச்ச நீதிமன்றம், பாரம்பரிய விளையாட்டு நடக்கும் நேரத்தில் ஒரு மாநில அரசையே டிஸ்மிஸ் செய்யுமா? என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறது.

எனவே, ஜல்லிக்கட்டு தொடர்பாக யாரேனும் கைது செய்யப்ப்படும் வாய்ப்பு ஏற்பட்டால் எங்கள் வாட்சப் குழுவை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...