ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக முதியோர் ஆதரவற்றோர் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்!


ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள கோவை  மாநகராட்சி முதியோர் ஆதரவற்றோர் காப்பகத்தில் நேற்று 15/01/2017 பொங்கல் விழா ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக  பாரம்பரியப்படி  கோலாகலமாக நடைபெற்றது.



இவ்விழாவில் சிறப்பம்சமாக ஆதரவற்ற முதியோர்களுடன் தொழுநோயால் பாதிக்கப்பட்டோரும் இணைந்து இந்த பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.





விழாவில்   உரி அடித்தல் விளையாட்டு, கயிறு இழுத்தல்,  எலுமிச்சை பழம் வாயில் சுமந்து செல்லும் விளையாட்டு, போன்ற விளையாட்டுகள் முதியோர்களுக்காக நடத்தப்பட்டது. 

போட்டிகளில் வெற்றி தோல்வியென பிரிக்காமல்  போட்டியில் கலந்துக் கொண்ட அனைத்து ஆதரவற்ற முதியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.



மேலும் நிகழ்ச்சியை மெருகூட்ட சாலை வழி செல்பவர்கள் இந்நிகழ்ச்சியை கண்டு அவர்களும் கலந்து கொண்டதும் விழா மேலும்  சிறப்படைய காரணமாக இருந்தது. மேலும் திரு தொல்காப்பியன் அவர்களின் சிலம்பாட்டமும், தடம் அமைப்பின் இசை  நிகழ்ச்சியும் இணைந்து இருந்தது. 

இந்த பொங்கல் விழா காப்பகத்தில் உள்ள  முதியவர்களுக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அடைந்தது  மட்டும் இல்லாமல் பலருக்கு இது போன்ற விழாவில் கலந்துக் கொண்டது வாழ்வில் முதன் முறையாகவும் இருந்தது.



விழாவை காண வந்த பொதுமக்கள் கூறும் பொழுது ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் ஆதரவற்றவர்களுக்கான  இந்த பொங்கல் விழாவை பார்க்கும் பொழுது மெய் சிலிர்த்து போகிறோம்.  எங்கள் வீட்டில் கூட இவ்வளவு மகிழ்ச்சியான எந்த விழாவும் நடந்தது இல்லை கண்டதும் இல்லை. பாட்டிகளின் இந்த உற்சாகமான விளையாட்டை கண்டே நாங்கள் காப்பகத்தினுள் வருவதற்கு காரணமாக இருந்தது என்றனர். 

இறுதியாக பொங்கல் வைத்து இயற்கை இறைவனுக்கு படையல் இட்டு அனைவருக்கும் கரும்பும் பொங்கலும் வழங்கப்பட்டது.

காப்பகத்தில் உள்ள முதியவர்களுக்கும் புத்தாடை வழங்கப்பட்டது, மேலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு புத்தாடைகளும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது, அத்துடன் போட்டிகளில் கலந்துக்கொண்ட அனைவருக்கும்  பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. 

முதியவர்களுக்காக இந்த  உதவி செய்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக பொங்கல் வாழ்த்துக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...