ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் 13 வயது சிறுமிக்கு இருதய ஈரிதழ் வால்வு மாற்று சிகிச்சை


திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்ட சிறுமிக்கு கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதய நிபுணர் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமிக்கு ஈ சி ஜி எடுத்து பரிசோதனை செய்துபோது அவரது இடதுபுறத்தில் உள்ள ஈரிதழ் தடுப்பு வால்வில் (மிட்ரல் வால்வு)  கசிவு இருந்தது. அதோடு இருதயமும் பெரியதாகியிருந்தது. ஈரிதழ் வால்வு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தியாகராஜமூர்த்தியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முதலமைச்சரின் காப்பீட்டின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.



டாக்டர் தியாகராஜமூர்த்தி தலைமையிலான டாக்டர்கள், விஜய் சதாசிவம் அசோக் ஹரிஹரன், மேனன், அருண்குமார், கிருஷ்ணன், சுஜித் ஆகியோர் அடங்கி குழுவினர் மிட்ரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். மார்பின் வலது பகுதியிலிருந்து 3 இன்ச் அளவிற்கு துளையிட்டு, இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று தொழில்நுட்ப சிகிச்சைப்படி வெற்றிகரமாக மேற்கொண்டனர். அவரது வால்வு, சரி செய்ய இயலாத அளவுக்கு மோசமடைந்திருந்தது. அறுவை சிகிச்சையில் மாற்றி அமைத்த பின், இரண்டு மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து ஓரிரு நாளில் அவர் இயல்பாக நடக்கவும் செய்தார். தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக இத்தகைய வால்வு மாற்று அறுவை சிகிச்சையை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் முதல்வர் காப்பீட்டு திட்டத்திலேயே இலவசமாக இந்த சிறுமிக்கு சர்வதேச தரத்தில் செய்யப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...