கோவை, ஜி.என் மில்ஸ் சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் உள்ள பெஸ்ட் பீப்பில் காலனியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்குபெற்று சிறப்பான முறையில் சமத்துவப் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

