பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு?


பவானி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியை அடுத்த தேக்குவட்டை என்ற இடத்திலும் மஞ்சக்கண்டி என்ற இடத்திலும் கேரள அரசு தடுப்பனை கட்ட முடிவு செய்துள்ளது. அணை கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.



இதற்காக அந்த பகுதிகளில் கட்டுமானப் பொருட்கள் குவித்து வைக்கபட்டுள்ளன. இந்த தடுப்பணையின் உயரம் 12 அடி அகலம் 30அடி நீளம் மற்றும் 200 அடி ஆழம் வரை இருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. கேரள அரசின் இந்த முயற்சியால் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாவர்.

முன்னதாக, சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி பள்ளத்தாக்கில் கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்திவைக்க அம்மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு இரு இடங்களில் தடுப்பணை கட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, கேரள அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பிலும், ம.தி.மு.க சார்பிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...