மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த ஆர்ப்பாட்டம் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கைது செய்யப்பட்டவர்களை எந்த வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டியும் கோவை வ.உ.சி.மைதானத்தில் 50க்கும் மேறட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூடியுள்ளனர். தற்போது மைதானத்தில் அமர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகள் ஏந்தி அமைதியான முறையில் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.





தொடர்ந்து இங்கு கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு ஒன்றை அளிக்க உள்ளனர். அதில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்த அனுமதி வேண்டியும், அலங்காநல்லூரில் நடைபெற்ற தாக்குதலுக்கு காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
