புதிய தலைமுறை பொறியாளர்கள் சமூக அமைப்பு சார்பில் இந்தியாவில் உள்ள பல்வேறு பொறியியல் மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கபட்ட 4வது கோ-கார்ட் மற்றும் தகுதி சுற்று பந்தயம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டர் ஸ்பீடுவே மைதானத்தில் நேற்று துவங்கியது.

இதில் இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களால் உருவாக்கபட்ட கார்கள் இப்போட்டியில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. இது குறித்து போட்டி ஒருங்கினைப்பாளர்கள் தெரிவிக்கும்போது அகில இந்திய அளவில் 169 பல்கலைகழகங்களில் இருந்து விண்ணபங்கள் பெறபட்டதாகவும் இதில் 97 கல்லூரிகள் தனிக்கை செய்யபட்டு கார் வடிவமைப்புக்கு அனுமதி அளிக்கபட்டதாக தெரிவித்தவர்கள் வடிவமைப்புக்கு பின் ஆய்வு மேற்கொள்ளபட்டு 44 கல்லூரிகள் தேர்ந்தெடுக்கபட்டதாக தெரிவித்தனர்.
இந்த போட்டியில் பங்கேற்க 44 கல்லூரிகளை சேர்ந்த பல்கலை பொறியாளர்களில் பதிவு செய்யபட்ட நிலையில் 38 பல்கலை கழக பொறியாளர்களுக்கு பிரேக் டெஸ்ட், ஸ்கிப் பேட், ஆக்ஸிலரேஷன் மற்றும் ஆட்டோ கிராஸ் ஆகிய தேர்வில் 28 பேர் இறுதியாக தேர்வு செய்யபட்டு போத்தனூர் செட்டிபாளையம் கரி மோட்டர் ஸ்பீடு வே மைதானதில் இறுதி போட்டிகளில் பங்கேற்றதாக தெரிவித்தனர்.

மேலும் இதில் சிறந்த வடிமைப்புகாக ஜிஎன்ஐடி ஹதராபாத் மாணவர்கள் முதல் இடத்தை பிடித்தனர். 2வது இடத்தை ஸாண்ட் லாங்வால் பல்கலை மாணவ்ர்கள் பெற்றனர். முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் கோப்பையும் வழங்கபட்டது. மேலும் எரிபொருள் சேமிப்பு, சிறந்த டிசைன் வடிவமைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கபட்ட்து.