மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழாவினையொட்டி பொதுமக்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதையை செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவ படத்திற்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன் மலர்தூவி மரியாதையை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
