மொபைல் போன் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்களை பெற “UTSONMOBILE” செயலி தெற்கு ரயில்வே அறிமுகம்


ரயில் பயணிகளுக்கு உதவும் பொருட்டு தெற்கு ரயில்வே மொபைல் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டு பதிவு செய்யும் “UTSONMOBILE” செயலியை (app) தற்போது இதர இடங்களில் உள்ள பயணிகளும் பயன்படுத்தும் பொருட்டு சில மாறுதல்களுடன் அறிமுகம் செய்துள்ளது. 

இதன் படி, பயணிகள் தங்கள் மொபைல் போனில் “UTSONMOBILE” செயலியை (app) நிறுவி, தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ள சேலம் கோட்ட ரயில் நிலையங்களான சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம், கரூர், சேலம் டவுன், ஆத்தூர், சின்ன சேலம் ரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்வதற்கான தங்களது முன்பதிவற்ற பயணச்சீட்டுகளை தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு மொபைல் போன் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்களை பெற, கீழ்க்கண்டவாறு செய்யவும்:

  • தங்களது ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் மொபைலில் “UTSONMOBILE” செயலியை (app) பதிவிறக்கம் செய்து நிறுவி, பின்னர் தங்களது மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • குறைந்த பட்சம் 100 ரூபாய்க்கு ரயில்வே வாலட் (R-wallet-Railway Wallet)  மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
  • மேற்கண்ட ரயில்நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் தங்களது மொபைல் எண் மற்றும் பயணச்சீட்டு பதிவு எண்ணை பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  • பிரிண்ட் செய்யப்பட்ட பயணச்சீட்டு இல்லாமல் பயணிகள் ரயில்களில் பயணிக்க இயலாது.


பயணிகளுக்கு மேற்கண்டவாறு தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுகளை பெறுவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அவர்கள் அந்த ரயில்நிலையங்களில் உள்ள முன்பதிவற்ற பயணச்சீட்டு அலுவலகத்தையோ, www.utsonmobileindrail.gov.in என்ற இணையதளத்தையோ, அல்லது பயணிகள் உதவி எண்: 044-25351621ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...