ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில் கோவை வ.உ.சி. மைதானத்தில் கோவையை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் 24 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோவை மக்களை போல ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிவருகின்றனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு மாணவர்கள் திரண்டுவருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொங்கல் விடுமுறை முடிந்து இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில். பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
ஜி சி டி கல்லூரி



வ வூ சி பூங்கா



லாலி ரோடு



அமிர்தா பல்கலைக்கழகம்


கொடிசியா
