சாடிவயலில் காட்டு யானை தாக்கி கும்கி யானை தந்தம் உடைந்தது

கோவை மாவட்டம், கோவை குற்றாலம் அருகே சாடிவயல் யானைகள் முகாம் அமைந்துள்ளது. இப்பகுதி மலையடிவாரப் பகுதி என்பதால் அவ்வப்போது அங்குள்ள குடியிருப்புகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட இங்கிருந்து கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இங்கு உடல் நலம்குன்றிய யானைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், சாடிவயல் யானைகள் முகாமில் நேற்று இரவு காட்டு யானைகள் நுழைந்து முகாமில் இருந்த கும்கி யானைகளை தாக்கின. இதில், அங்கிருந்த சுஜய் என்னும் கும்கி யானையை காட்டு யானைகள் பலமாக தாக்கின.



காட்டு யானைகளின் இந்த தாக்குதலில், கும்கி யானை சுஜயின் வலது தந்தம் உடைந்தது. இதைத்தொடர்ந்து, கும்கி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு  வருகிறது

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...