கோவை மாவட்டம், கோவை குற்றாலம் அருகே சாடிவயல் யானைகள் முகாம் அமைந்துள்ளது. இப்பகுதி மலையடிவாரப் பகுதி என்பதால் அவ்வப்போது அங்குள்ள குடியிருப்புகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட இங்கிருந்து கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இங்கு உடல் நலம்குன்றிய யானைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சாடிவயல் யானைகள் முகாமில் நேற்று இரவு காட்டு யானைகள் நுழைந்து முகாமில் இருந்த கும்கி யானைகளை தாக்கின. இதில், அங்கிருந்த சுஜய் என்னும் கும்கி யானையை காட்டு யானைகள் பலமாக தாக்கின.

காட்டு யானைகளின் இந்த தாக்குதலில், கும்கி யானை சுஜயின் வலது தந்தம் உடைந்தது. இதைத்தொடர்ந்து, கும்கி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில், சாடிவயல் யானைகள் முகாமில் நேற்று இரவு காட்டு யானைகள் நுழைந்து முகாமில் இருந்த கும்கி யானைகளை தாக்கின. இதில், அங்கிருந்த சுஜய் என்னும் கும்கி யானையை காட்டு யானைகள் பலமாக தாக்கின.

காட்டு யானைகளின் இந்த தாக்குதலில், கும்கி யானை சுஜயின் வலது தந்தம் உடைந்தது. இதைத்தொடர்ந்து, கும்கி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது