அ.தி.மு.க கட்சியில் இருந்து விலகும் கோவை மாவட்ட மூத்த நிர்வாகி மலரவன்.


அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் கோவை மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த அக்கட்சியின் மூத்த நிர்வாகியான மலரவன் அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மலரவன், அதிமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து அக்கட்சியில் இருந்து வருவதாகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்த கட்சி தற்போது மிகவும் மோசமடைந்து இருப்பதாக தெரிவித்தார். ஜெயலலிதா தற்போது இல்லை என்ற தைரியத்தில் சசிகலா குடும்பத்தினர் கட்சியையும், ஜெயலலிதாவையும் நாங்கள் தான் காப்பாற்றினோம் என கூறி வருவதாகவும், சசிகலா குடும்ப ஆதிக்கம் பிடிக்காததால் அ.தி.மு.க.வில் இருந்து விலகி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். கட்சியை ஒரு குடும்பம் காப்பாற்ற முடியாது எனவும், மக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு சசிகலாவிற்கு இல்லை எனவும் கூறிய அவர், 

அ.தி.மு.க.வில் சூடு சொரணையுள்ள உண்மையான தொண்டர்கள் நீடிக்க முடியாது என தெரிவித்தார்.  ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க.விற்கு இருந்த மக்கள் ஆதரவு தற்போது இல்லை எனவும், சசிகலா கூட்டங்களுக்கு மக்களை பணம் கொடுத்து அழைத்து வருவதாகவும் மலரவன் தெரிவித்தார். அ.தி.மு.க.வில் மூத்த நிர்வாகி சசிகலா குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி முதல் நபராக கட்சியில் இருந்து விலகியிருப்பது அ.தி.மு.க தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...