ஜனவரி மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 27ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்டரங்கில் அன்றைய தினம் காலை 10 மணியளவில் ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று தங்களது விவசாயம் தொடர்பான பிரச்சனைகளை கூறி பயனடையுமாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.