கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பயிர் சாகுபடி செலவு கணக்கெடுப்புத் திட்டத்தின் தேசிய அளவிலான மூன்று நாள் கருத்தரங்கு இன்று (18-1-2017) பல்கலைக்கழக பொன்விழா அரங்கில் தொடங்கியது. இதில், சுமார் 16-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து பொருளாதாரத்துறை விஞ்ஞானிகள் 150 பேர் பங்கேற்கின்றனர்.

கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றிய தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் முதன்மை செயலர் வெ.இறையன்பு கூறுகையில், சாகுபடிச் செலவு கணக்கெடுப்பானது, நுகர்வோருக்கு நியாயமான விலையில் வேளாண் விளைபொருட்கள் கிடைப்பதற்கும் விவசாயிகளுக்கு நிறைவான லாபம் தரும் குறைந்தபட்ச ஆதார விலையினை அரசு நிர்ணயம் செய்வதற்கும் உதவி புரிகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் எட்டு பயிர்களில் இப்பணி நடைபெறுகிறது. இதில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், காலத்தே தரமான தகவல்களை இத்திட்டத்தில தொகுப்பதன் மூலம் பயிர்களின் தரத்திற்கேற்ற விலை கிடைக்க வழிவகை செய்வதாக அமைகின்றது. இது நடைமுறைப்படுத்தப்படும் போது விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்" என்று கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு.இராமசாமி தலைமை உரையாற்றுகையில், குறைந்த அளவான மழை நீரைக் கொண்டு துபாய் நாடானது தொழில்நுட்பம் மூலம் அதிக அளவு நீர் உபயோகத்தை ஏற்படுத்துவதாகவும் மணல் பாங்கான நிலவளமுடைய இஸ்ரேல் நாடானது வேளாண்மையில் குறைந்த அளவு நீரைக் கொண்டு சாதனை புரிந்து வருகிறது. தைவான், நெதர்லாந்து, பிரேசில் நாடுகள் வேளாண்மையில் துரித முன்னேற்றம் பெற்று வருவதையும் குறிப்பிட்டார்.
உழுதவர் கணக்குப் பார்த்தால் உழவுக்குக் கூட மிஞ்சாது என்ற பழமொழி வழக்கில் உள்ளதைப் போல குறைந்தபட்ச ஆதார விலைக் கொள்கைக்கு இத்திட்டத்தின் கீழ் சேகரிக்கும் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதனை செம்மையாகவும் திறம்படவும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த சாகுபடிச் செலவு கணக்கெடுப்பு திட்டமானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பித்த 1971-ம் ஆண்டு முதற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது" என்று கூறினார்.
முன்னதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மைய இயக்குநர் முனைவர் சின்னதுரை வரவேற்புரை வழங்கினார்.
புதுதில்லி வேளாண் அமைச்சக ஆலோசகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு இக்கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் பொருளியல் துறைத் தலைவர் முனைவர் மணி நன்றியுரை வழங்கினார்.

கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றிய தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் முதன்மை செயலர் வெ.இறையன்பு கூறுகையில், சாகுபடிச் செலவு கணக்கெடுப்பானது, நுகர்வோருக்கு நியாயமான விலையில் வேளாண் விளைபொருட்கள் கிடைப்பதற்கும் விவசாயிகளுக்கு நிறைவான லாபம் தரும் குறைந்தபட்ச ஆதார விலையினை அரசு நிர்ணயம் செய்வதற்கும் உதவி புரிகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் எட்டு பயிர்களில் இப்பணி நடைபெறுகிறது. இதில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், காலத்தே தரமான தகவல்களை இத்திட்டத்தில தொகுப்பதன் மூலம் பயிர்களின் தரத்திற்கேற்ற விலை கிடைக்க வழிவகை செய்வதாக அமைகின்றது. இது நடைமுறைப்படுத்தப்படும் போது விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்" என்று கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு.இராமசாமி தலைமை உரையாற்றுகையில், குறைந்த அளவான மழை நீரைக் கொண்டு துபாய் நாடானது தொழில்நுட்பம் மூலம் அதிக அளவு நீர் உபயோகத்தை ஏற்படுத்துவதாகவும் மணல் பாங்கான நிலவளமுடைய இஸ்ரேல் நாடானது வேளாண்மையில் குறைந்த அளவு நீரைக் கொண்டு சாதனை புரிந்து வருகிறது. தைவான், நெதர்லாந்து, பிரேசில் நாடுகள் வேளாண்மையில் துரித முன்னேற்றம் பெற்று வருவதையும் குறிப்பிட்டார்.
உழுதவர் கணக்குப் பார்த்தால் உழவுக்குக் கூட மிஞ்சாது என்ற பழமொழி வழக்கில் உள்ளதைப் போல குறைந்தபட்ச ஆதார விலைக் கொள்கைக்கு இத்திட்டத்தின் கீழ் சேகரிக்கும் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதனை செம்மையாகவும் திறம்படவும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த சாகுபடிச் செலவு கணக்கெடுப்பு திட்டமானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பித்த 1971-ம் ஆண்டு முதற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது" என்று கூறினார்.
முன்னதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மைய இயக்குநர் முனைவர் சின்னதுரை வரவேற்புரை வழங்கினார்.
புதுதில்லி வேளாண் அமைச்சக ஆலோசகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு இக்கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் பொருளியல் துறைத் தலைவர் முனைவர் மணி நன்றியுரை வழங்கினார்.