கோவை பீளமேடு பகுதியில் 'டைடில் பார்க்' என்னும் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில், கோவையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது, ஐடி ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஊர்வலம் டைடில் பார்க் வளாகத்தில் தொடங்கி கோவை மருத்துவக் கல்லூரி வழியாக அவிநாசி சாலையை அடைந்து, ஹோப்ஸ் சிக்னல் வழியாக மீண்டும் டைடில் பார்க் வந்தடைந்தது. இதனால் அவிநாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இந்நிலையில், கோவையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது, ஐடி ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். மேலும், ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஊர்வலம் டைடில் பார்க் வளாகத்தில் தொடங்கி கோவை மருத்துவக் கல்லூரி வழியாக அவிநாசி சாலையை அடைந்து, ஹோப்ஸ் சிக்னல் வழியாக மீண்டும் டைடில் பார்க் வந்தடைந்தது. இதனால் அவிநாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
