கோவையில் அனைந்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரிலான புதிய கட்சியின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்


ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்றுவது தீபாவின் நோக்கம் அல்ல எனவும் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சியை மீட்பது மட்டுமே அவரது நோக்கம் என தீபாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.



ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா விரைவில் புதிய கட்சியை துவங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கோவையில் அனைந்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரிலான புதிய கட்சியின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் கூறும் போது ஜெயலலிதாவின் சொத்துக்களை கைப்பற்றுவதற்காக தீபா புதிய கட்சியை துவங்கவில்லை எனவும் அதற்கு சட்டரீதியான நடவடிக்கைகளே போதும் எனவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுகவையும் அதன் சின்னமான இரட்டை இலையை மீட்பதுமே புதிய கட்சி துவங்குவதற்கான நோக்கம் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

கட்சிக்கு வர அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் ஆர்வமாக இருப்பதாகவும் கட்சி துவங்கிய பின்னர் பல மூத்த தலைவர்கள் கட்சியில் இணைவார்கள் எனவும்  அவர் அப்போது நம்பிக்கை தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 4 லட்சம் பேர் இதுவரை புதிய கட்சியில் இணைந்துள்ளதாக கூறிய அவர் தமிழகம்  முழுவதும் எவ்வளவு பேர் இணைந்துள்ளனர் என்ற கணக்கை விரைவில் வெளியிட  உள்ளதாகவும் தெரிவித்தார். 

முன்னதாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வெளியிட்ட அவர் கோவை மாவட்ட நிர்வாகிகளையும் அறிமுகம் செய்து வைத்தார். அதிமுகவின் தலைமை மையமான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா வந்ததை அடுத்து முக்கிய நிர்வாகிகள் பலர் அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில் எதிர்தரப்பான தீபா தரப்பு உறுப்பினர் சேர்க்கை வரை விரைவாக செயல்படுவது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...