ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கோவையை அடுத்த வெள்ளலூர் பகுதியில் இன்று பொதுமக்கள் மாடுகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பொதுமக்களின் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளாமல் அடக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய பொதுமக்கள், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கோவையை அடுத்த வெள்ளலூர் பகுதியில் இன்று பொதுமக்கள் மாடுகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பொதுமக்களின் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளாமல் அடக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய பொதுமக்கள், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.