பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டி கோவை மாணவர்கள் போராட்டம்

கோவை அருகே ஐல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டியும், உடைத்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொளுத்தும் வெயில், கொட்டும்பனி உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல் இரவு- பகலாக கோவை வஉசி மைதானத்தில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக இன்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் போராட்டக் களத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே, இன்று கோவையில் நடைபெற்று வரும் போராட்டக்களத்திற்கு வந்த திரைப்பட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஐல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்.

தமிழின அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் போராட்டத்தில் நடந்து வரும் இளைஞர்களின் போராட்டம், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வரும் வரை தொடருமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இளைஞர்கள் வஉசி மைதானத்தில் திரண்டு வருவதால் கோவை - அவிநாசி சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. 

இதனிடையே, கோவையை அடுத்த திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க குளிர்பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை சாலையில் கொட்டியும், உடைத்தும் போராட்டம் நடத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...