கோவை அருகே ஐல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெப்சி, கோக் உள்ளிட்ட பன்னாட்டு குளிர்பானங்களை சாலையில் கொட்டியும், உடைத்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொளுத்தும் வெயில், கொட்டும்பனி உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல் இரவு- பகலாக கோவை வஉசி மைதானத்தில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக இன்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் போராட்டக் களத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே, இன்று கோவையில் நடைபெற்று வரும் போராட்டக்களத்திற்கு வந்த திரைப்பட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஐல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்.
தமிழின அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் போராட்டத்தில் நடந்து வரும் இளைஞர்களின் போராட்டம், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வரும் வரை தொடருமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இளைஞர்கள் வஉசி மைதானத்தில் திரண்டு வருவதால் கோவை - அவிநாசி சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனிடையே, கோவையை அடுத்த திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க குளிர்பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை சாலையில் கொட்டியும், உடைத்தும் போராட்டம் நடத்தினர்.
கொளுத்தும் வெயில், கொட்டும்பனி உள்ளிட்டவற்றை பொருட்படுத்தாமல் இரவு- பகலாக கோவை வஉசி மைதானத்தில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக இன்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைதி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால் போராட்டக் களத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனிடையே, இன்று கோவையில் நடைபெற்று வரும் போராட்டக்களத்திற்கு வந்த திரைப்பட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஐல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்.
தமிழின அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் போராட்டத்தில் நடந்து வரும் இளைஞர்களின் போராட்டம், ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வரும் வரை தொடருமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இளைஞர்கள் வஉசி மைதானத்தில் திரண்டு வருவதால் கோவை - அவிநாசி சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனிடையே, கோவையை அடுத்த திருமலையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்க குளிர்பானங்களான பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை சாலையில் கொட்டியும், உடைத்தும் போராட்டம் நடத்தினர்.