வால்பாறையில் பாரதியார் பல்கலைக் கழகத்தால் செயல்பட்டுவரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் குறித்து கவனம் செலுத்தாமல் உள்ள மத்திய, மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கல்லூரி வளாகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் "தடை செய் தடை செய் பீட்டா அமைப்பை தடை செய்", "அனுமதி கொடு அனுமதி கொடு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கொடு" போன்ற முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், தமிழர்களின் பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டை தடை செய்துள்ளது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றி பீட்டா அமைப்பை தடை செய்வதோடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியும் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.


இதில் "தடை செய் தடை செய் பீட்டா அமைப்பை தடை செய்", "அனுமதி கொடு அனுமதி கொடு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கொடு" போன்ற முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், தமிழர்களின் பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டை தடை செய்துள்ளது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றி பீட்டா அமைப்பை தடை செய்வதோடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியும் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.