ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வால்பாறை கல்லூரி மாணவர்கள்

வால்பாறையில் பாரதியார் பல்கலைக் கழகத்தால் செயல்பட்டுவரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் குறித்து கவனம் செலுத்தாமல் உள்ள மத்திய, மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கல்லூரி வளாகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 





இதில் "தடை செய் தடை செய் பீட்டா அமைப்பை தடை செய்", "அனுமதி கொடு அனுமதி கொடு ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கொடு" போன்ற முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறுகையில், தமிழர்களின் பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஜல்லிக்கட்டை தடை செய்துள்ளது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றி பீட்டா அமைப்பை தடை செய்வதோடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியும் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். 

இது குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...