ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் பத்திரிகையாளர்கள் பேரணி

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை உடனடியாக நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு மீது நீதிமன்றம் விதித்துள்ள தடையினை நீக்க வேண்டும். ஜல்லிக்கட்டினை எதிர்த்து தமிழர்களின் கலாச்சாரத்தினை அழிக்கும் பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லட்சக்கணக்கான இளைஞர்கள் மேற்கொண்டுள்ள இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் உட்பட தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள், ஐடி ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை அனைத்து பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடைபெற்றது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி, கோவை இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வஉசி மைதானம் சென்றடைந்தது.

இப்பேரணியின் போது பத்திரிகையாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்கி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பியபடி பேரணி சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...