கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலவலகம் மற்றும் தேஜா சக்தி மகளிர் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து மகளிருக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜனவரி 25ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
கோவை கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள தேஜா சக்தி மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் அன்றைய தினம் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து கல்வித் தகுதி உடைய மகளிர் மட்டும் பங்கேற்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள முன்னணி தனியார் துறை வேலையளிப்போர் கலந்துகொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர்.
மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் எவ்வித கட்டனமும் வசூலிக்கப்படமாட்டாது.
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் பெருமளவில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள தேஜா சக்தி மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் அன்றைய தினம் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து கல்வித் தகுதி உடைய மகளிர் மட்டும் பங்கேற்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள முன்னணி தனியார் துறை வேலையளிப்போர் கலந்துகொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர்.
மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் எவ்வித கட்டனமும் வசூலிக்கப்படமாட்டாது.
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் பெருமளவில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.