மாநகராட்சி கட்டண கழிப்பிடங்களில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்திலும் மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணங்கள் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடங்கள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிம இனங்களுக்கு மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். 

மேலும், மாநகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்கள் அறிவிப்புப் பலகையில் நன்கு தெரியுமாறு வைக்கப்பட்டு, அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டுமே குத்தகைதாரர்கள் வசூல் செய்ய வேண்டும். 

மேலும், நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் குத்தகைதாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, குத்தகை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...