கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 68-வது வார்டு ராமநாதபுரம், வள்ளியம்மாள் வீதியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் மாநகராட்சிப் பூங்காவை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின், ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதையும், ராமலிங்கஜோதி நகரில் மீட்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது க.விஜயகார்த்திகேயன் உடன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர் நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி, உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா, உதவி செயற்பொறியாளர் கலாவதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.