கோவை ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி - மும்பை ரயிலை மறித்து சட்டகல்லூரி மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜல்லிகட்டு விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத  மத்திய அரசை கண்டித்து கோவை ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி - மும்பை ரயிலை மறித்து  சட்டகல்லூரி மாணவர்கள்  போரட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிகட்டு போட்டி நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி  கோவையில் அனைத்து கல்லூரிகளை  சேர்ந்த மாணவர்களும் , இளைஞர்களும் மூன்றாவது நாளாக வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் வ.உ.சி மைதானத்திற்கு சென்று கலந்து கொண்டனர். 

பின்னர் 50க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் வ.உ.சி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.  கோவை ரயில் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் , ரயில் நிலையத்திற்குள் சென்று கன்னியாகுமரி - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது மத்திய அரசு ஜல்லிகட்டு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும் , பீட்டா அமைப்பினை  கொண்டு வந்ததே பா.ஜ.க அரசுதான் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். 

காவிரி விவகாரத்தில் ஓரு நிலைப்பாடும், ஜல்லிகட்டு விவகாரத்தில் ஓரு நிலைப்படும் எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், மக்கள் விழித்துக்கொண்டார்கள் எனவும் ஜல்லிகட்டுக்கு அனுமதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை சமரசப்படுத்திய காவல் துறையினர் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பி வைத்தனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் காரணமாக ரயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...