கோவையில் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பில்லூர், ஆழியாரில் இருந்து தண்ணீர் பெறப்படும் என மாநகராட்சி ஆணையர் தகவல்


கோவை மாவட்டத்தில் சிறுவாணி குடிநீர் வரத்து முழுமையாக நின்று விட்ட காரணத்தால், குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் விதமாக பில்லூர்-1 திட்டத்தின் மூலம் கூடுதலாக குறிச்சி பகுதிக்கு நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டரும், குனியமுத்தூர் பகுதிக்கு நாளொன்றுக்கு கூடுதலாக ஆழியார் குடிநீர் 20 லட்சம் லிட்டரும் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

"கோவை மாவட்டத்தில் பருவமழை இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக 140 வருடங்களுக்கு முன்னர் பருவமழை இல்லாத காரணத்தினால் கோவை மாவட்டத்தில் இது போன்ற வறட்சி காணப்பட்டது. இருந்தாலும் கோவை மாநகராட்சி போர்கால அடிப்படையில் தேவையான குடிநீர் விநியோகம் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. 

குறிப்பாக ஆழியார் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது குறிச்சி பகுதிக்கு நாளொன்றுக்கு 51 லட்சம் லிட்டரும், குனியமுத்தூர் பகுதிக்கு நாளொன்றுக்கு 39 லட்சம் லிட்டரும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், சிறுவாணி குடிநீர் விநியோகம் இல்லாத காரணத்தினால் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு குறிச்சி பகுதிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பில்லூர் குடிநீர், நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டருடன் கூடுதலாக நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஆழியார் நீராதாரத்திலிருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரிலிருந்து நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் குனியமுத்தூர் பகுதிக்கு வழங்க இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குறிச்சி மற்றும் மாச்சம்பாளையம் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு குறைவுபடாது. எதிர்காலத்தில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்படும்.

எனவே, குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து பொதுமக்களும் குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...