கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் இயங்காது என கைத்தொழில், சிறு தொழிற்சாலைகள் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, டாக்ஸி, திரையரங்கம், மருத்தகம், கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தொழில் மற்றும் சிறு தொழிற்சாலைகள் இயங்காது என டேக்ட் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார்.
இதே போல் பல்வேறு தொழிற்சங்கத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.