கோவையில் 4வது நாளாக தொடரும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம்

கோவை வ உ சி மைதானத்தில் நான்காவது நாளாக தொடரும் இளைஞர்களின் மாபெரும் எழுச்சி போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு இளைஞர்களின் போராட்டம் வலுக்கு நிலையில், கோவையில் இரவு நேரங்கள் கூட பாராமல் பொதுமக்கள் கடும் பனியிலும் குடும்பங்களுடன் சென்றும் மாணவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். 




இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பொதுமக்களும் பெரும் ஆதரவினை மாணவர்களுக்கு அளித்து வருகின்றனர். போராட்ட களத்தில் மாணவர்களுக்கு மருத்துவ முகாம், உணவு பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டும் வருகிறது. மேலும் இரவு நேரங்களில் ட்ரம்ஸ், பறை இசைகள் போன்றவற்றை மூலமாகவும் இளைஞர்கள் நடனம் ஆடியும், பாரம்பரிய விளையாட்டுக்களான கம்பு சுத்துதல் போன்றவற்றை நிகழ்த்தியும் உற்சாகத்துடன் போராடி வருகின்றனர்.  மைதானத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இனைந்து பீட்டாவை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கு மத்திய, மாநில அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு முறையில் கோஷங்களை எழுப்பி போராடினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...