தமிழகத்தின் பழமைவாய்ந்த பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்ததை கண்டித்து நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் மாபெரும் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வால்பாறையில் அரசுக்கல்லூரி மாணவ மாணவியர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து இன்று பீட்டா அமைப்பை கண்டித்து ஒப்பாரி வைத்து, பாடை கட்டி கொக்க கோலா, பெப்சி போன்ற கார்பரேட் நிறுவனங்களின் குளிர்பானங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்யவுள்ளனர்.

மேலும், வால்பாறையில் உள்ள வால்பாறை வட்ட வியாபாரிகள் சங்கம் மற்றும் வால்பாறை வணிகர் சங்கத்தினரும் மற்றும் வியாபாரிகளும் பீட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வால்பாறையில் அரசுக்கல்லூரி மாணவ மாணவியர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து இன்று பீட்டா அமைப்பை கண்டித்து ஒப்பாரி வைத்து, பாடை கட்டி கொக்க கோலா, பெப்சி போன்ற கார்பரேட் நிறுவனங்களின் குளிர்பானங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்யவுள்ளனர்.

மேலும், வால்பாறையில் உள்ள வால்பாறை வட்ட வியாபாரிகள் சங்கம் மற்றும் வால்பாறை வணிகர் சங்கத்தினரும் மற்றும் வியாபாரிகளும் பீட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.