தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டினை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக இளைஞர்களால் அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
லட்சக் கணக்கான மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்திற்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள், பல தனியார் நிறுவனங்கள் என பலரும் தங்களது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக கோவை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் 200-க்கு மேற்பட்ட வங்கி அதிகாரிகள் ஊர்வலமாக சென்று கோவையின் தற்போது போராட்டக் களமாகிய வஉசி மைதானத்தில் போராடும் இளைஞர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் பொட்டலங்களை வழங்கினார்கள்.
இந்த ஊர்வலத்தினை கூட்டமைப்பின் அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினர் வணங்காமுடி மற்றும் கோவை மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னின்று நடத்தினர்.
லட்சக் கணக்கான மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்திற்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள், பல தனியார் நிறுவனங்கள் என பலரும் தங்களது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக கோவை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் 200-க்கு மேற்பட்ட வங்கி அதிகாரிகள் ஊர்வலமாக சென்று கோவையின் தற்போது போராட்டக் களமாகிய வஉசி மைதானத்தில் போராடும் இளைஞர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் பொட்டலங்களை வழங்கினார்கள்.
இந்த ஊர்வலத்தினை கூட்டமைப்பின் அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினர் வணங்காமுடி மற்றும் கோவை மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னின்று நடத்தினர்.