இந்தியாவின் பன்முக பயன்பாட்டு வாகனங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான மஹிந்திரா என்ற முழுமையான 3எஸ் (சேல்ஸ், சர்வீஸ், ஸ்பேர்ஸ்) சேவை வசதியுடன் புதிய டீலர்ஷிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய முதன்மை ஷோரூம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு விற்பனை மையம், 2 சேவை மையங்களையும் ஒருஇருப்பு நிலையத்தையும் கொண்டிருக்கும். நாடு முழுவதும் விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதை மேற்கொள்கிறது.
இந்த விநியோக மையமானது, 65 ஆயிரத்து 789 சதுரடி பரப்பளவில் மஹிந்திரா ஆட்டோமொபைல், தனிநபர் தேவையுடன் வணிகத்தையும் நிறைவு செய்ய அனைத்து தயார்ப்புகளையும் கொண்டிருக்கும்.
விற்பனைக்கான விசாரணைகள், சேவை மற்றும் உதிரிபாகங்கள் தேவைக்கு என இரண்டு விற்பனையகங்கள் ஆர்.எஸ்.புரம் மற்றும் ஈரோட்டில் அமைந்துள்ளது.
விற்பனைக்கும் பின் சேவைக்கென துடியலூரில் 3 அதிநவீன பட்டறைகளை 25 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 25 பணிமனை மற்றும் 10 வாகன அழகுபடுத்தும் தளங்களையும் கொண்டிருக்கும். வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் வாகனங்களை வழங்கவும், சந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாகனங்களை வழங்கவும், 150 வாகனங்களை இருப்பு வைக்க இடப்பரப்பை கொண்டுள்ளது.
இதன் துவக்கவிழாவில் பேசிய மஹிந்திரா அன்ட் மஹிந்திரா லிமிடெட் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவு முதுநிலை துணைத் தலைவர் வீஜே ராம் நக்ரா கூறுகையில், "வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கும் வசதிக்கும் ஏற்ப சிறப்பான விற்பனை மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.
எங்களுக்கு மிக முக்கிய சந்தையாக திகழும் தமிழ்நாட்டில் விரிவாக்க நடவடிக்கையாக கோவையில் 2-வது அனைத்து வசதிளையும் கொண்ட மையத்தை ஏற்படுத்தியுள்ளோம். நகரில் செயல்படும் 2 விற்பனை மையங்கள், 3 சேவை மையங்களும் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை தரும்" என்றார்.

இந்த புதிய முதன்மை ஷோரூம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு விற்பனை மையம், 2 சேவை மையங்களையும் ஒருஇருப்பு நிலையத்தையும் கொண்டிருக்கும். நாடு முழுவதும் விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதை மேற்கொள்கிறது.
இந்த விநியோக மையமானது, 65 ஆயிரத்து 789 சதுரடி பரப்பளவில் மஹிந்திரா ஆட்டோமொபைல், தனிநபர் தேவையுடன் வணிகத்தையும் நிறைவு செய்ய அனைத்து தயார்ப்புகளையும் கொண்டிருக்கும்.
விற்பனைக்கான விசாரணைகள், சேவை மற்றும் உதிரிபாகங்கள் தேவைக்கு என இரண்டு விற்பனையகங்கள் ஆர்.எஸ்.புரம் மற்றும் ஈரோட்டில் அமைந்துள்ளது.
விற்பனைக்கும் பின் சேவைக்கென துடியலூரில் 3 அதிநவீன பட்டறைகளை 25 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 25 பணிமனை மற்றும் 10 வாகன அழகுபடுத்தும் தளங்களையும் கொண்டிருக்கும். வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் வாகனங்களை வழங்கவும், சந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாகனங்களை வழங்கவும், 150 வாகனங்களை இருப்பு வைக்க இடப்பரப்பை கொண்டுள்ளது.
இதன் துவக்கவிழாவில் பேசிய மஹிந்திரா அன்ட் மஹிந்திரா லிமிடெட் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவு முதுநிலை துணைத் தலைவர் வீஜே ராம் நக்ரா கூறுகையில், "வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கும் வசதிக்கும் ஏற்ப சிறப்பான விற்பனை மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.
எங்களுக்கு மிக முக்கிய சந்தையாக திகழும் தமிழ்நாட்டில் விரிவாக்க நடவடிக்கையாக கோவையில் 2-வது அனைத்து வசதிளையும் கொண்ட மையத்தை ஏற்படுத்தியுள்ளோம். நகரில் செயல்படும் 2 விற்பனை மையங்கள், 3 சேவை மையங்களும் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை தரும்" என்றார்.