அனைத்து வசதிகளுடன் மேலும் ஒரு புதிய மஹிந்திரா டீலர்ஷிப் கோவையில் துவக்கம்

இந்தியாவின் பன்முக பயன்பாட்டு வாகனங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமான மஹிந்திரா என்ற முழுமையான 3எஸ் (சேல்ஸ், சர்வீஸ், ஸ்பேர்ஸ்) சேவை வசதியுடன் புதிய டீலர்ஷிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்த புதிய முதன்மை ஷோரூம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு விற்பனை மையம், 2 சேவை மையங்களையும் ஒருஇருப்பு நிலையத்தையும் கொண்டிருக்கும். நாடு முழுவதும் விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதை மேற்கொள்கிறது.

இந்த விநியோக மையமானது, 65 ஆயிரத்து 789 சதுரடி பரப்பளவில் மஹிந்திரா ஆட்டோமொபைல், தனிநபர் தேவையுடன் வணிகத்தையும் நிறைவு செய்ய அனைத்து தயார்ப்புகளையும் கொண்டிருக்கும்.

விற்பனைக்கான விசாரணைகள், சேவை மற்றும் உதிரிபாகங்கள் தேவைக்கு என இரண்டு விற்பனையகங்கள் ஆர்.எஸ்.புரம் மற்றும் ஈரோட்டில் அமைந்துள்ளது.

விற்பனைக்கும் பின் சேவைக்கென துடியலூரில் 3 அதிநவீன பட்டறைகளை 25 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 25 பணிமனை மற்றும் 10 வாகன அழகுபடுத்தும் தளங்களையும் கொண்டிருக்கும். வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் வாகனங்களை வழங்கவும், சந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாகனங்களை வழங்கவும், 150 வாகனங்களை இருப்பு வைக்க இடப்பரப்பை கொண்டுள்ளது.

இதன் துவக்கவிழாவில் பேசிய மஹிந்திரா அன்ட் மஹிந்திரா லிமிடெட் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவு முதுநிலை துணைத் தலைவர் வீஜே ராம் நக்ரா கூறுகையில், "வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கும் வசதிக்கும் ஏற்ப சிறப்பான விற்பனை மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.

எங்களுக்கு மிக முக்கிய சந்தையாக திகழும் தமிழ்நாட்டில் விரிவாக்க நடவடிக்கையாக கோவையில் 2-வது அனைத்து வசதிளையும் கொண்ட மையத்தை ஏற்படுத்தியுள்ளோம். நகரில் செயல்படும் 2 விற்பனை மையங்கள், 3 சேவை மையங்களும் புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை தரும்" என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...