ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோவையில் மக்கள் ஆட்டோ ஊழியர்கள் பேரணி

ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். தமிழர்களின் வீரவிளையாட்டை எதிர்த்துள்ள பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என லட்சக் கணக்கானோர் ஒன்றிணைந்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் இத்தகைய கலாச்சார பாதுகாப்பு போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தற்போது வரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் அரசு நிர்வாகத்தினை எதிர்த்தும் தற்போது மாணவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.



இதனிடையே, மாணவர்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும், தனியார் நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் மக்கள் ஆட்டோ சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேரணி

 நடைபெற்றது.

இன்று மதியம் 3 மணி அளவில் மக்கள் ஆட்டோ சார்பில் நடைபெற்ற இந்த பேரணி கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகில் துவங்கி வஉசி மைதானத்தை வந்தடைந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...