கோவையை புரட்டி எடுத்த இளைஞர்களின் புரட்சி போராட்டம்!


கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டம் வ.உ.சி மைதானத்தில் மாபெரும் எழுச்சி பெற்றுள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒருபகுதியாக கோவையில் ஜல்லிக்கட்டிற்காக பல்வேறு தரப்பின் ஆதரவு அளித்தும் கோவையில் முழுக்கடையடைப்பு நடைபெற்றது. இதன் மையமாக நேற்றிரவு வ.உ.சி மைதானத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.



நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாணவர்கள் எழுச்சி கூட்டதிற்கு பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளையும் போராட்டத்திற்கு அழைத்து வருகின்றனர். பணிக்கு செல்பவர்களும் தங்களின் ஆதரவினை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். மேலும், இளைஞர்கள் மோடி போன்ற உருவம் சித்தரித்து அதனை போராட்டகளத்தில் கொண்டு வந்தும் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தும், பறை இசைகளிலும், சிறுவர் சிறுமியர் கம்பு சுத்தியும், சிறுவர்கள் ஒலிபெருக்கியின் மூலமாகவும் ஜல்லிகட்டிற்கு ஆதரவாகவும் பேசியும் பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்தனர். மேலும் ஆங்காங்கே இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



ஐந்தாவது நாளாக தொடரும் இந்த எழுச்சி போராட்டத்தில் மாணவர்கள் சாலைகளின் அமர்ந்தும் போராடி வருகின்றனர். மேலும் பெண்கள் சிலர் போராட்டத்தின் போது மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கான முதலுதவிகளும் மைதானத்தின் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசரகட்டத்தில் மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...