கோவையில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டதிற்கு அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து வந்த ஜான் என்பவர் கலந்து கொண்டார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் நமக்களித்த சிறப்பு பேட்டியில் கூறிதாவது:-
நான் கடந்த 2-ம் தேதி இந்தியா வந்தேன்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் நடத்தும் போரட்டத்தை அறிந்து, அவர்களுக்கு ஆதரவு தர தற்போது கோவை வந்துள்ளேன். பீட்டா அமைப்புக்கு மக்களின் கலாச்சாரம் குறித்து எதுவும் தெரியாது. ஒவ்வொரு நாட்டிலும் சென்று குழப்பத்தை ஏற்படுத்துவது தான் பீட்டாவுக்கு வேலை.மக்கள் விரோத போக்கை கடைபிடித்துவதுகிறது பீட்டா அமைப்பு.
அமெரிக்காவில் தொடங்கபட்ட அந்த அமைப்புக்கு அமெரிக்கர்கள் பலர் எதிராக உள்ளனர்.
இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு, இந்திய அரசு தமிழக மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, ஜான் வ.உ.சி. மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றினார்.

