தமிழ்நாட்டில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் ஐந்தாவது நாளாக நடத்தி வருகின்றனர். இன்றும் வலுபெற்று வரும் இப்போராட்டம் குன்னூர் பகுதியில் மூன்றாவது நாளாக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையில், கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இளைஞர்கள் கனமழையினையும் பொருட்படுத்தாமல் தங்களின் உரிமைக்காக போராடி வரும் நிலையில் குன்னூரைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டன ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையையும் நீக்கக்கோரியும் குன்னூர் வாகன நிறுத்தும் இடத்தில் இரவு பகல் பாராமல் மூன்றாவது நாளாக குரல் கொடுத்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இளைஞர்கள் கனமழையினையும் பொருட்படுத்தாமல் தங்களின் உரிமைக்காக போராடி வரும் நிலையில் குன்னூரைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டன ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையையும் நீக்கக்கோரியும் குன்னூர் வாகன நிறுத்தும் இடத்தில் இரவு பகல் பாராமல் மூன்றாவது நாளாக குரல் கொடுத்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.