தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக கூறி அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பினர் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த தடை உத்தரவு பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிகட்டுக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடைபெறும் என்றிருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனதினர் என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த ஆனைகட்டி ஆலமரமேடு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த தடையாக இருக்கும் பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாகி அதிகாரி பூர்வா ஜோஸ்புராவின் உருவ பொம்மைக்கி நெற்றியில் 1ரூபாய் நாணயம் திலகமிட்டும், செருப்பு மாலை அணிவித்து பாடையில் சுமந்து இறுதி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

பட்டாசுகள் வெடித்தும் ஒப்பாரி வைத்தும் சுமந்து சென்றவர்கள் உருவ பொம்மை மீது கோக் குளிர்பானம் மற்றும் மண் எண்னெய் ஊற்றி உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிகட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பீட்டா அமைப்பு மீண்டும் தலையிட்டால் உருவ பொம்மையை எரித்தது போல பீட்டா அமைப்பின் தலைமை அதிகாரியையும் எரிப்போம் என ஆக்ரோஷத்துடன் தெரிவித்தனர்.


இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த ஆனைகட்டி ஆலமரமேடு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த தடையாக இருக்கும் பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாகி அதிகாரி பூர்வா ஜோஸ்புராவின் உருவ பொம்மைக்கி நெற்றியில் 1ரூபாய் நாணயம் திலகமிட்டும், செருப்பு மாலை அணிவித்து பாடையில் சுமந்து இறுதி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

பட்டாசுகள் வெடித்தும் ஒப்பாரி வைத்தும் சுமந்து சென்றவர்கள் உருவ பொம்மை மீது கோக் குளிர்பானம் மற்றும் மண் எண்னெய் ஊற்றி உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிகட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பீட்டா அமைப்பு மீண்டும் தலையிட்டால் உருவ பொம்மையை எரித்தது போல பீட்டா அமைப்பின் தலைமை அதிகாரியையும் எரிப்போம் என ஆக்ரோஷத்துடன் தெரிவித்தனர்.
