பீட்டா அமைப்பின் பூர்வா ஜோஸ்புராவின் உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு செய்து எரித்த மலைவாழ் மக்கள்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டில் மாடுகள் துன்புறுத்தபடுவதாக கூறி அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பினர் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த தடை உத்தரவு பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிகட்டுக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடைபெறும் என்றிருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனதினர் என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. 



இதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த ஆனைகட்டி ஆலமரமேடு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த தடையாக இருக்கும் பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாகி அதிகாரி பூர்வா ஜோஸ்புராவின் உருவ பொம்மைக்கி நெற்றியில் 1ரூபாய் நாணயம் திலகமிட்டும், செருப்பு மாலை அணிவித்து பாடையில் சுமந்து இறுதி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.



பட்டாசுகள் வெடித்தும் ஒப்பாரி வைத்தும் சுமந்து சென்றவர்கள் உருவ பொம்மை மீது கோக் குளிர்பானம் மற்றும் மண் எண்னெய் ஊற்றி உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிகட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பீட்டா அமைப்பு மீண்டும் தலையிட்டால் உருவ பொம்மையை எரித்தது போல பீட்டா அமைப்பின் தலைமை அதிகாரியையும் எரிப்போம் என ஆக்ரோஷத்துடன் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...