லட்சுமி விலாஸ் வங்கியின் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி கண்காட்சி

கோவை, அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் லட்சுமி விலாஸ் வங்கியின் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி கண்காட்சி ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இக்கண்காட்சியானது, அனைத்து வகையிலும் தொழில்துறையினருக்கு உதவும் வகையில் மேபடுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. சிறு, நடுத்தர தொழில் நிறுவனத்தினரின் முன்னேற்றம், தொழில்சார்ந்த விவாதங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.



இது குறித்து, லட்சுமி விலாஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி முகர்ஜி பேசுகையில்; இந்திய பொருளாதரத்தில் சிறு, நடுத்தர பொருளாதரத்தில், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன என்பதை புரிந்து கொண்டுள்ளோம். இந்த நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவருவதிலும், நிலையான லாபத்தை ஈடுபடுவதிலும், வருவாயை அதிகரிப்பதிலும் பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றன. இக்கண்காட்சியால் புதிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கும். வங்கிக்கும், பொதுமக்களுக்கும் என இருதரபினருக்கும் பயனுள்ளதாக அமையும். இன்னும் பல்வேறு இடங்களில் இது போன்ற கண்காட்சியை நடத்த வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த வாய்ப்புகளை சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.    



மேலும், வாடிக்கையாளர்களின் அரங்குகளுடன், வங்கியின் பிற சேவைகளான ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு, உடல் நலத்துக்கான மருத்துவ காப்பீடு மற்றும் வங்கியின் சேவைகள் போன்றவைகளும் இடம் பெற்றுள்ளன. சில தொழில் நிறுவனகளுக்கு மட்டுமின்றி, பிற வகையிலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து மகிழ்வோடு கண்காட்சியை கண்டு களிக்க, பொழுதுபோக்கு நிகழ்சிகளுடன் அறுசுவை உணவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...