'பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து', அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம்

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து கோவை காந்தி புரத்தில் அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலிபோராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு கேரள மாநிலத்திற்குள் சென்று மீண்டும் அட்டப்பாடி அருகே தமிழகப்பகுதிக்குள் நுழைகின்றது. இந்நிலையில் கேரள பகுதிக்குள் பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ள கேரள அரசு, இரண்டு இடங்களில் கட்டுமானப்பணிகளை துவங்கியுள்ளது. இந்நிலையில் கேரள அரசின் இந்த நடவடிக்கையினை தடுத்து நிறுத்த கோரி கோவை காந்தி புரத்தில் அனைத்துகட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக ,கொங்குநாடு ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள், தமிழர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மனித சங்கிலி போராட்டதின் போது பேட்டியளித்த திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பவானி ஆற்று பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அணை கட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையும், விவசாய பிரச்சினையும் ஏற்படும் எனவும்  பொது மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் தந்தை பெரியார் திராவிடகழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அணை கட்டப்படுவதை தடுக்காவிட்டால் வரும் 29ம் தேதி அனைத்து கட்சியினருடன் சென்று அணை கட்டப்படும் இடத்தை முற்றுகையிடப் போவதாகவும் அதனை தொடந்து மாணவர்களை திரட்டி கேரள அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கேரள அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...