டிராயிடம் சிக்கிய ஆப்பிள்

டிராய் அறிமுகப்படுத்திய ஆப்-ஐ, ஆப்பிள் பயனாளர்கள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி இல்லாதது ஏன் என்பது குறித்த கேள்வியை அந்நிறுவனத்திடம் டிராய் எழுப்பியுள்ளது.

இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு, தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் புகார்களுக்கும் டிராய் (TRAI) அமைப்பு, டு நாட் டிஸ்டர்ப் (Do Not Disturb) என்ற ஆப்-ஐ அறிமுகப்படுத்தியது. இதை ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட Do Not Disturb ஆப்-ஐ, ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இடம்பெறச் செய்யவில்லை. அதனால் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு, ஆப்பிள் நிறுவனத்தைக் கண்டித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. அதனால் அந்த ஆப் இடம்பெறவில்லை. வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்பு விஷயத்தில் ஆப்பிள் நிறுவனம் எப்போதுமே கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளும் என்று ஆப்பிள் நிறுவனம் பதிலளித்துள்ளது

Newsletter

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள்: ஆதாரத்துடன் உறுதி செய்த விஞ்ஞானிகள்!

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹஙà...

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...