கோவையில் தேசிய அளவிலான இறகுப் பந்துப் போட்டியினை பாமக அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்தார்


கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தில் தேசிய அளவிலான 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டிகளை தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத் தலைவரும், பாமக மாநில இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்தார்.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான 15 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான இறகுப்பந்து போட்டிகள் இன்று துவங்கின. 

கோயமுத்தூர் இறகுப்பந்து சங்கமும், தமிழ்நாடு இறகுப்பந்து சங்கமும் இணைந்து நடத்தும் இப்போட்டிகள் வருகின்ற 29-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளன. 



இந்த போட்டிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளை தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தலைவரும், பாமக மாநில இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் துவக்கி வைத்து, ஒரு மாணவருடன் அன்புமணி இராமதாஸ் சிறிது நேரம் இறகுப்பந்து விளையாடினார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இறகுப்பந்து போட்டிகளில் பல திறமையான வீரர்கள் இருந்த போதும், உள் அரங்குகள், பயிற்சி, உடற்தகுதி ஆகியவை மேம்படுத்த முறையான வசதிகள் இல்லை என தெரிவித்தார். 

தமிழ்நாடு இறகுப்பந்து சங்கத்தின் சார்பில் உள் கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இறகுப்பந்து போட்டிகள் தொடர்பான விபரங்கள் இணையதளங்களில் பதிவிட்டு வருவதால் வெளிப்படை தன்மை நிலவி வருவதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக திறமைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

இறகுபந்து உள் அரங்கள் கட்டமைப்புகள் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் அமைக்கவும், சென்னை மற்றும் மதுரை பகுதிகளில் சிறப்பு பயிற்சி மையம் அமைக்க நிலம் ஒதுக்கவும் கோரி, தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாக அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...