கோயமுத்தூர் யெங் இந்தியன் சேப்டர்ஸ் சார்பில் இன்று நடிகர் ஸ்ரீகாந்த் "கோவை விழா"வினை துவக்கி வைக்கிறார்


கோயமுத்தூர் 'யெங் இந்தியன்' சேப்டர்ஸ் அமைப்பின் சார்பில் இன்று "கோவை விழா 2017" துவக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தின் பிரபலமான புரூக்பீல்ட் வனிகவளாகத்தில் நடைபெறவுள்ள இதன் துவக்க நிகழ்ச்சியில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைக்க உள்ளார். 

இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில், கோயமுத்தூர் யெங் இந்தியன் சேப்டர்ஸ் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட "கோவை விழா பாட்டு" வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

மேலும், கடந்த ஒரு வருடமாக யெங் இந்தியன் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சமூகச் சேவை, 'நோ ஹாரன்', குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு, 'ஸ்வச் பாரத்' தூய்மை பணி உள்ளிட்டவை குறித்து வீடியோவும் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து, கோவையின் சமூக மேம்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கவுரவப்படுத்தப்பட உள்ளனர். பின், நடிகர் ஸ்ரீகாந்த் பார்வையாளர்களிடம் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

முன்னதாக, கோவை விழா இன்று துவங்கி வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை புரூக்பீல்ட் வனிகவளாகம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் நடைபெறும் எனவும், இவ்விழாவின் போது பல்வேறு தனியார் அமைப்புகள் கோவை யெங் இந்தியன் சேப்டர்ஸ் உடன் இணைந்து அவ்வமைப்பின் பேனரின் கீழ் 90 நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், கடந்த வருடத்தை விட இவ்வருடம் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் ஏராளமானோர் இதில் பங்குபெருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...