கோவை விழாவின் ஒருபகுதியாக தலைகவச விழிப்புணர்வு பேரணி

யங் இந்தியா அமைப்பின் கோவை கிளை, இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் 9-வது ஆண்டாக கோவை மாநகரில் கோவை விழா கொண்டாட்டம் ஜனவரி 27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறவுள்ளது.

இதன் ஒருபகுதியாக இன்று காலை 9:30 மணியளவில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் யங் இந்தியா மற்றும் காட்டன் சிட்டி துரோட்டில் இனைந்து இருசக்கர வாகனம் மூலம் தலைகவச விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.



இப்பேரணியில் 50க்கும் மேற்பட்ட உயர்திறன் கொண்ட இருசக்கர வாகனம் மூலம் வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணிவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது. இதனை கோவை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சரவணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசுகையில்; கோவை விழா 9வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் கோவை விழா கொண்டாட்டம் சிறப்பாக கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் ஒருபகுதியாக இன்று யங் இந்தியா மற்றும் காட்டன் சிட்டி துரோட்டில் சார்பில் தலைகவச விழிப்புணர்வு பேரணியை 1000த்திற்கும் அதிக உயர்திறன் கொண்ட இருசக்கர வாகனம் மூலம் ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடத்துகின்றனர். இந்த பேரணியில் இருசக்கர ஓட்டுனர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி தலைகவசம் அணிந்தும் பேரணியை நடத்தினர். அதேபோல் பொதுமக்களும் சாலை பயணத்தில் பாதுகாப்புடன் பயணிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 



  

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...